பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2016

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

'ஆயுர்வேத மசாஜ் நிலையம்' என்ற பெயரில் இந்த விபச்சாரவிடுதி இயங்கி வந்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கு அமைய பொலிஸார் முற்றுகை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா, முகத்துவாரம், பாதுக்க மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 20, 21 மற்றும் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியினை நடாத்தி வந்த முகாமையாளர் எனக் கூறப்படும் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று கல்கிசை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.