பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2016

பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு: மக்களே எச்சரிக்கை

தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும் மோசடி திட்டமே பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.