பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2016

நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து
மகிந்த ராஜபக்க்ஷ விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறு மாத்திரமே தான் ஆலோசனை வழங்கியதாக மகிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் நகர நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தன்னை அதில் இருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு அறிவித்துள்ளார்.
நிழல் அமைச்சரவை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் வரை தான் அது பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் அது பற்றி தனக்கு எவரும் அறிவிக்கவில்லை எனவும் எதுவும் தெரியாது என்பதால், தன்னை அதில் இருந்து நீக்குமாறும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரையே நிழல் அமைச்சரவையின் அடுத்த பிரதமர் என கருதுவதே நாடாளுமன்ற சம்பிரதாயமாகும். எனினும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்க்ஷவை நிழல் பிரதமராக நியமித்துள்ளனர்.
இதனை அறிந்தே மகிந்த ராஜபக்க்ஷ நிழல் அமைச்சரவையின் பொறுப்புகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.