ஜெ. உடல்நலம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்த ராஜாத்தி அம்மாள்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, ராஜாத்தி அம்மாள் வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். சசிகலாவிடம் ஜெ. உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். கலைஞர் அறிவுரைப்படி ராஜாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்துள்ளார்.