பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2017

டெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி உயிரிழப்பு

 கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த  செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார்.

இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மாணவி பின்னர் குணமடைந்த நிலையில் மீளவும் அவருக்கு கை, கால்களில் வலி எனத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இன்று உயிரிழந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்திய சாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.