பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2018

ஐதேகவின் தேர்தல் விஞ்ஞானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிவாஜிலிங்கம் கடிதம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளமையால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளமையால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும், “உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் விஞ்ஞாபனத்தில், 1000 விகாரைகள் 500 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இன, மத குரோதங்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க, ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.