பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2018

தொடர்ந்து போராடுங்கள்! - கேப்பாப்புலவு மக்களிடம் சம்பந்தன்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஓராண்டை பூர்த்தி செய்யும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் போது அவர், பொது மக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார் என கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஓராண்டை பூர்த்தி செய்யும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் போது அவர், பொது மக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார் என கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு காணிகளை விடுவிப்பதற்குறிய அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.மிக விரைவில் நல்லதொரு முடிவினை மக்களுக்கு பெற்றுத்தருவதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.