பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு


தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் நாள் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன் பேரின்பன், லெப் செந்தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாய் அவர்கள் கோப்பாயில் முதன்மைச்சுடரை ஏற்றினார்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.