இலங்கையில் அரபுமொழி ‘அவுட்’ - வருகிறது சுற்றுநிருபம்!
தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.