பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2019

8 மணி நேரம் ரிஐடியின் விசாரணையில் சிக்கிய ஹிஸ்புல்லா!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர விசாரணை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. விசாரணைகள் முடிந்த அவர், மாலை 5.30 மணியளவில் வெளியேறிச் சென்றார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர விசாரணை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. விசாரணைகள் முடிந்த அவர், மாலை 5.30 மணியளவில் வெளியேறிச் சென்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது கல்குடா பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று அரேபியர்கள் இருவரை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்றுள்ளது.