பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2019

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெறுபவர்கள் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தது.
தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெறுபவர்கள் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தனது வீட்டிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை அண்மைக்காலமாக பெற்று வந்துள்ளமை மின்சார சபையினர் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்த மின்சார சபையினர் பொலிஸாரிடம் கையளித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.