பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2019

கோத்தாவுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம்- சித்தார்தன்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரம், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்
கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனை கூறியுள்ளாரர்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரம், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனை கூறியுள்ளாரர்.

'ஜனாதிபதியாவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவது அவசியம் என கோத்தாபய கூறினேன், வெகுவிரைவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்திக்க விரும்புவதாக கோத்தாபய கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யார் தீர்வை வழங்க போவதாக கூறுகின்றாரோ அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார். வெறுமனே தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பதால் நம்பிக்கையில்லை. ஜேவிபியுடனும் பேசி பார்த்து முடிவு எடுக்க உள்ளதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்