பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2019

ஜேவிபி வேட்பாளராக அநுரகுமார!

ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெறும், ஜே.வி.பி.யின் மாநாட்டின்போது அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாளராக ரோஹன விஜேவீரவை களமிறக்கியது. அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலகவை களமிறக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.