பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2019

ஐதேக கூட்டணி பங்காளிகளின் முக்கிய கூட்டம் இன்று

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் திகதி குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் திகதி, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது