பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2020

சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது

இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவர். இலங்கையில் இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை இது உறுதி செய்கிறது என்றும், கூட்டமைப்பின் பேச்சாளர். எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.