பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை

www.pungudutivuswiss.com

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

“பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என அறிய முடிகின்றது. ஆனால் பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது மகனான அமைச்சர் நாமல் ராஜபக்சவும் தன்னை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

    

இதேவேளை பிரதரும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதனை குறைத்துக் கொண்டுள்ளனர்” என குறித்த ஆங்கில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன