யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார். |