பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2025

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்! Top News [Sunday 2025-02-02 17:00]

www.pungudutivuswiss.com

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2.00 மணியளவில்  மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

கடந்த 29ஆம் திகதி மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மூன்று நாட்களாக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 10.30 மணியளவில், அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி தச்சன்காடு இந்து மயானத்தில், பிற்பகல் 2 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.