குறித்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டில் இடம்பெற்றது. ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியின்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் இது குறித்து முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பேரில்,மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில், சந்தேக நபர் எதிர்வரும் மே 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. |