புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2025

பொலிசை ஏமாற்றிய பொலிஸ் கைது! [Tuesday 2025-05-13 17:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், தனது சக உத்தியோகஸ்தரை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.1470,000 பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், தனது சக உத்தியோகஸ்தரை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.1470,000 பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டில் இடம்பெற்றது. ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியின்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் இது குறித்து முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பேரில்,மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கில், சந்தேக நபர் எதிர்வரும் மே 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

ad

ad