பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2013

வவுனியாவில் இன்று பண்டாரவன்னியன் நினைவு தின விழா நடைபெற்றது

இன்று வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுதின விழா நடைபெற்றது. வவுனியா நகரில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நகரசபை மண்டபத்தில் விழா நடைபெற்றது.  இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி சிற்றம்பலம், அருணா செல்லத்துரை, அகளங்கன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பண்டார வன்னியன் பாடல் சிற்றம்பலம் அவர்களால் வவுனியா முன்னைநாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.  தமிழ் மாமன்றத்தின் கவியரங்கமும் , கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் வரலாற்று சிறப்புமிக்க முல்லை மணி எழுதிய பண்டார வன்னியன் நாடகமும் அருணா செல்லத்துரை அவர்களின் வரலாற்று ஆய்வுரையும் இடம்பெற்றது.