பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி சான்றிதழ்கள் 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களில் தாதியர் பயிற்சி நெறியை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்ட 10 தமிழ் பெண்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது.

 
இந்தப் பயிற்சியின்போது  முதலுதவிகள் சத்திரசிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் உதவிகள் முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தமிழ்பெண்களுக்கு கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் கற்றுக்கொடுக்கப்பட்டன.
 
பயிற்சிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஆர்.இன்சார்  பி.சிபோரா மற்றும் பி.பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டதாக  பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.