பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014

News Service
ஐ பி சி தமிழன் நினைவேந்தல் நிகழ்வு 
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை
(31-05-2014) இடம்பெறவுள்ளது. ஐ.பி.சி தமிழின் யாழ்ப்பாணச் செய்தியாளராகக் கடமையாற்றிய மயில்வாகனம் நிமலராஜன், மட்டக்களப்புச் செய்தியாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன், மாமனிதர் தராக்கி சிவராம், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மாமனிதர் என்.எஸ்.மூர்த்தி, ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் ஆகியோரது நினைவாகவே இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் கடினமான காலகட்டத்தில் ஐ.பி.சி தமிழிற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியது மட்டுமன்றி, தாயக மக்களிற்காக அரும்பணியாற்றிய ஊடகர்களின் இந்த நினைவேந்தலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐ.பி.சி தமிழ் வானொலி அழைப்பு விடுத்துள்ளது.