பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
இந்நிலையிலேயே தான்  அரசியலில் நுழைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த கட்சியின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடுவார் என விரைவில் அறிவிப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.