பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2015

நோர்வேயின் தலைநகரில் இலங்கைத் தமிழ் பெண் துணைமேயராகத் தெரிவு

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இலங்கை வம்சாவளித் தமிழ் பெண்ணொருவர் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

27 வயதான கம்சாஜினி குணரத்தினம் என்ற குறித்த பெண், மிக நீண்ட காலமாக ஒஸ்லோவில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இடதுசாரி தொழிலாளர் கட்சி சார்பில் இவர் தலைநகர் ஒஸ்லோவின் துணைமேயராக தெரிவாகி உள்ளார்.

துணைமேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள கம்சாஜினி குணரத்தினம் 2011 ம் ஆண்டு ஒஸ்லோவுக்கு அருகில் உள்ள உத்தேயா தீவில், பாசிஸ பயங்கரவாதி நடத்திய கொலைவெறியாட்டத்தில் உயிர் தப்பியவர் என்றும் தெரிய வந்துள்ளது.