பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு

அருகாமையில் இன்றுபிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

    

தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.