கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
2 நவ., 2012
கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.
மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர்- ஓயாத ஆரவாரமும் சர்ச்சையும்
சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.
ஐ.நா.துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின்
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி தி.மு.க. சார்பில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ.,
மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.