பக்கங்கள்

பக்கங்கள்

திமுக மேடைகளில் பிரசாரம் செய்வதில் தயக்கமில்லை: நடிகை குஷ்பு [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 05:38.12 AM GMT +05:30 ] திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகியிருப்பதால், திமுக மேடைகளில் பிரசாரம் செய்வேன் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். திமுக-வில் இருந்த நடிகை குஷ்பு, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று குஷ்புவிடம் நிருபர்கள், திமுக-வில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்த நீங்கள் திமுக-வுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் திமுக-வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். திமுக-வில் இருந்து வெளியே வந்த போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. தலைவர் கருணாநிதி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, கட்சியிலிருந்து நானாக தான் வெளியேறினேன். தற்போது கூட்டணி உருவாகியிருப்பதால் ஒரே மேடையில் பிரசாரம் செய்வேன், எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சி மேலிடம் கூறினால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என்றும், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.