| ||||||
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது ஒருவேளை சங்கக்காரவுக்கு நன்மையாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் வெற்றிக் கெப்டன்களை சிறையில் தள்ளுகின்ற இந்நாட்டில், சங்கக்கார வெற்றிக்கிண்ணத்துடன் வந்திருந்தால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார் என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் தெரிவித்தார். இந்திய அணி தோல்வியடைய வேண்டுமென்று திருப்பதியில் பூஜை செய்வதை எமது நாட்டில் செய்திருந்தால் பலன் கிட்டியிருக்கும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்கார சிறைக்கு செல்லாது தப்பிப்பிழைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லவேண்டும் என்றே நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை. இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதியில் வேண்டி பூஜை செய்தது பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்தநாட்டு அணி தோற்கவேண்டும் என்று அந்த நாட்டு தெய்வத்திடம் வேண்டினால் அதற்கு அந்த தெய்வம் இடம்கொடுக்குமா? கொடுக்காது. எனவே எமது நாட்டில் பூஜை செய்து இந்திய அணி தோற்கவேண்டும் என்று வேண்டியிருந்தால் ஒருவேளை தெய்வம் கேட்டுக்கொண்டிருக்கும். தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரா, உபதலைவராக இருந்த மஹேல ஜயவர்தன ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அதேபோல் அரவிந்த டி சில்வாவும் தேர்வுக்குழுவில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குமார் சங்கக்காரவுக்கு நன்மையாகவே முடிந்துள்ளது. ஏனெனில் வெற்றிகளைக் குவிக்கின்ற தலைவர்கள் இந்நாட்டின் அரசியல் தன்மையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எத்தகைய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவர். அந்த வகையில் குமார் சங்கக்கார கிண்ணத்துடன் வந்திருப்பாரேயானால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார். எனவே, குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் பதவியிலிருந்தும் விலகியமையானது அவரது சிறைவாசத்தை தடுத்திருக்கின்றது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். ___ E-mail to a |
-
8 ஏப்., 2011
7 ஏப்., 2011
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் நியூமகஜின் சிறைக்கு விஜயம்!
Published on April 7, 2011-7:39 pm · No Commentsநியூமகஜின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா ஆகியோரிடம் பார்வையிட்டனர்.
நியூ மகஜின் சிறைச்சாலையில் 142தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததுடன் அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் சென்று பார்வையிட வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்புடன் இன்று நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளிலும் தாம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாக முடிக்குமாறும் குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரசதரப்பை கோரியதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்
உள்ளூராட்சி தேர்தல் மாற்றம் சம்பந்தர், ஹக்கீம் கருத்துக்களுக்கு மனோ கணேசன் பாராட்டு!
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்ளூராட்சி தேர்தல் உட்பட நடை முறையில் உள்ள தேர்தல் முறை மாற்றப்படுவது இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக் கியமான விவகாரமாகும். முழுமையான விகிதாசார முறைமை மாற்றப்பட்டு தொகுதி மற்றும் விகிதா சார முறைமைகள் கலந்த கலப்பு முறைமை நடைமுறை ஆக்கப்படுவதற் கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தவிர்த்து எதிர்காலத்தில் நடைபெறப் போகும் அனைத்து உள்ளூராட்சி, மாகாண சபை பாராளுமன்ற தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் நடை பெறவிருக்கின்றன.
இச்சட்ட மூலங்களில் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை விட, வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான் மையினர் மத்தியிலே சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை மிக அதிகமாக பாதிக்கப் போகின்றன. இந்நிலையில் வடகிழக்கிற்கு வெளியே செயற்படும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், மக்கள்பிரதிநிதிகளும் இச்சட்ட மூலம் தொடர் பிலே நியாயமான அக்கறையை வெளிக் காட்டாதது கவலைக்குரியதாகும். பாராளு மன்றத்திற்கு வந்து சபையிலே இச்சட்ட மூலத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் எமது மக்களை எந்த அளவிற்கு பாதிக்கப் போகின்றன என்பது பற்றிய எமது கருத்துக் கள் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட் டிருக்க வேண்டும்.
அத்துடன் இச்சட்ட மூலத்தில் உள்ளடக் கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்று யோசனைகள் எடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும். சபை ஏற்றுக்கொள்கிறதோ, இல்லையோ நமது கருத்துக்கள் ஹன் சாட்டிலே பதிவாக வேண்டும். ஆனால் இவற் றை வட கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியுள்ளார்கள்.
இந்நிலையில் வடகிழக்கிலே வாழ் கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ப துடன் வடகிழக்கிற்கு வெளியே சிறுபான் மையாக வாழும் தமிழ் மக்களின் நலன் களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முக மாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் அவர்களின் நிலைப்பாடு அமைந் துள்ளது. அதேபோல் ஆளும் தரப்பிலே இடம்பெற்றிருந்தாலும் கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவூப் ஹக்கீம் இச்சட்ட மூலம் தொடர்பிலே ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தமிழ் பேசும் மக்கள் தலைவர்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் பாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார்
நடிகை சுஜாதா உடலுக்கு நடிகர்-நடிகைகள் அஞ்சலி
1974-ல் “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுஜாதா. இப்படத்தில் வரும் தெய்வம் தந்த வீடு வீதி இருக்க என்ற பாடல் இப்போதும் மிகப்பிரபலம்.
கடல் மீன்கள் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக “அந்தமான் காதலி” படத்தில் நடித்துள்ளார். ”ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “அமைதிப்படை”, “விதி”உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். சுஜாதாவின் கணவர் பெயர் ஜெயகர். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று பிற் பகல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
சுஜாதா உடல் சென்னை நீலாங்கரை பீச்ரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்-நடிகைகள் பலர் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை லட்சுமி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
1 ஏப்., 2011
தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரி சுவிஸ் - பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடல்!
வியாழன், 31 மார்ச் 2011 22:55
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இனங்களுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் அவை ஆகியன சுவிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் 16 அமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்று கூடலை நடத்த உள்ளன.
கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருகிறது. இவர்களின் இந்த கருத்து தவறானது என இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக்குழு மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாக உள்ளதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இச் சட்டத் திருத்தம் எண்ணற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
எனவேதான் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இவ் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.
• இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க் குற்ற விசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
• அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கைகள் வரை அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்றும் அகதிகள் தொடர்பான சட்டத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலை சுவிஸ் தமிழரவையின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் நடத்த உள்ளன.
31 மார்., 2011
பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 மார்., 2011
யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 02:03.00 PM GMT ]
1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வீரர் சேவாக் மூன்றாவது ஓவரில் மட்டும் ஐந்து நான்குகளை அடித்து மொத்தமாக இருபத்தொரு ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடிய ஆட்டத்தை கண்டு களிக்கின்றனர்
India 48/1 (5.5 ov)
Pakistan
India won the toss and elected to bat
- India RR 8.22
- Last 5 ovs 44/1 RR 8.80
| Current time: 15:03 local, 09:33 GMT | ODI career | ||||||||||||||||||
Batsmen | Runs | B | 4s | 6s | SR | This bowler | Last 5 ovs | Mat | Runs | HS | Ave | |||||||||
Sachin Tendulkar(rhb) | 8 | 11 | 1 | 0 | 72.72 | 0 (3b) | 8 (11b) | 452 | 18016 | 200* | 45.15 | |||||||||
Bowlers | O | M | R | W | Econ | 0s | 4s | 6s | This spell | Mat | Wkts | BBI | Econ | |||||||
*Wahab Riaz(lfm) | 0.5 | 0 | 0 | 1 | 0.00 | 5 | 0 | 0 | 0.5-0-0-1 | 18 | 27 | 3/22 | 5.23 | |||||||
Umar Gul(rfm) | 3.0 | 0 | 33 | 0 | 11.00 | 11 | 8 | 0 | 3-0-33-0 | 88 | 133 | 6/42 | 5.05 |
Recent overs 4 4 . 4 4 5nb . | 3 . 4 1 . 4 | . . . 4 . 4 | . . 1lb . W Last Bat V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00 Fall of wicket: 48/1 (5.5 ov); Partnership: 48 runs, 5.5 overs, RR: 8.22 (Tendulkar 8, Sehwag 38) Umpire reviews remaining India 1 (0 successful, 1 unsuccessful); Pakistan 2 (0 successful, 0 unsuccessful) |
5.5 | Wahab Riaz to Sehwag, OUT |
V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00 | |
5.05 Taufel has given Sehwag out and |
மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக நகரி : இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் திருமலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை வரவேற்கவும், தங்குமிட வசதிகளை செய்து தரவும், தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்
17 மார்., 2011
12 மார்., 2011
11 மார்., 2011
8 மார்., 2011
திமுக 121 தொகுதிகளில் போட்டி: கலைஞர்
18 டிச., 2010
5 டிச., 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)