இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி
புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூகசேவை ஆன்மிகம் தமிழ்த்தொண்டு என அனைத்து துறைகளையும் தொட்டு சேவையாற்றினார்.
தனது இளவயதில் பெருங்காடு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம அந்த பகுதி மக்களுக்கு சேவை செய்தவர் தனது பேச்சாற்றல் துணை கொண்டு அகில இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார் .நெடுந்தீவு முதல் அம்பாறை வரை தனது சிறந்த பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்து தமிழரசு கட்சியின் தூணாக விளங்கினார்.அக்கட்சியின் உயர்ந்த பதவிகளில் அலங்காரம் செய்தார்.ஒரு முறை இவருக்கான அனுபவம் திறமை காரணமாக கிடைக்கவிருந்த உயர் பதவி ஒன்று சில உள்நோக்கம் கொண்டோரால் தவறி போனது.இந்த காலகட்டத்தில் இவருக்கு உதயமான சிந்தனையின் அடிப்படையில் கட்சி அரசியல் மண்ணுக்கு பெரிதாக உதவ முடியாத நிலை கண்டு அதனை விட்டு சர்வோதய அமைப்பில் இணைந்து கொண்டார் . அகில இலங்கை சர்வோதயத்தில் சேர்ந்து கொண்ட இவரால் சர்வோதயம் ஆலமரமென வட பகுதிஎங்கும் பரவி விளுதுவிட்டது .இந்த அமைப்பின் ஊடாக பல வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளை இனத்தவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.ஏராளமான வெளிநாட்டு உதவி நிறுவனங்களை எமது மண்ணுக்கு வரவழைத்து அதன் மூலம் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்.காலப்பகுதியில் சர்வோதய சிங்கள தலைமை செய்யும் சில வேறுபாடுகளை ( கட்டுரையின் பின்னே இந்த பிரிவின் காரணம் விளக்கபட்டுள்ளது ) உணர்ந்து தனியே வட இலங்கை சர்வோதயம் என்ற புதிய அமைப்பை நிறுவினார்.இதன் தலைமையகத்தை புங்குடுதீவில் அமைத்துக் கொண்டார்.
தமக்காக வாழாது மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்று தானே அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் திருநா அண்ணர். வாழ்நாள் முழுவதும் சுவாமி இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் வழியில் தன்னை நெறிப்படுத்தி பகட்டான வாழ்வைத் துறந்து, பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்ததுடன் மக்கள்சேவையே மகேசன் சேவை எனத் தான் வாழ்ந்ததுடன் மட்டும் நின்றுவிடாது, தன் தாய், சகோதரியரையும் இணைத்துத் தன் குடும்பத்தையை தான் பிறந்த மண்ணுக்காக சர்வோதய வழியில் காந்தீய சிந்தனையுடன் உழைத்துவாழ வழிகாட்டிச் சென்றவர் அவர்.
அரசியல்ரீதியில், 1950களின் பின்னரும் 60களின் முற்பகுதிகளிலும் திருநா அண்ணரின் தமிழரசுக் கட்சியின்பாற்பட்ட ஈடுபாடு புங்குடுதீவில் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வளர வாய்ப்பளித்தது. இவரது கருப்பு நிற 1306 என்ற இழக்க தகடு பொருத்திய A 40 ரக சிற்றூர்தி தமிழரசு கட்சிக்காக ஓடாத ஊரே இல்லை எனலாம் .அவரரது வாகன இலக்கமே எனது மிகசிறிய பருவ களத்தில் இருந்தே என் மனதில் பதிந்துள்ளது என்றால் அவர் அந்த வாகனத்தை எவ்வளவு பயன்படுத்தி இருப்பார் என்பதனை அறிய இதனை குறிப்பிட்டேன் . 1962 இல் புங்குடுதீவில் வீசிய புயல்காற்றின்போது தடைப்பட்டிருந்த பாதைப் போக்குவரத்தை சீர்செய்ய தனிமனிதனாகப் புறப்பட்டு இளைஞர்களையும் இணைத்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டதும், தீவகத்துக் குளங்களை சீர்செய்து மழைநீரைச் சேகரித்து அந்த மண்ணுக்கு நல்ல நீர் வளம் சேர்க்கத் தனிமனிதனாகப் பணியாற்றியதும், அரசாங்கத்தையே நம்பியிராது நாமே நமது கிராமத்தை சுயதேவைப் பூர்த்திசெய்யும் ஒரு காந்தீயக் கிராமமாக வளர்த்தெடுப்போம் என்ற நம்பிக்கையை இளைஞர் மத்தியில் கொண்டு சேர்த்தவர். முதலாளித்துவ, வர்த்தக சிந்தனையில் ஊறித்திளைத்திருந்த தீவகத்து மனிதர்களில் மனமாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை சமூகநலன்விரும்பிகளாக மாற்றலாம் என்று இறுதிவரை நம்பியிருந்தார்.
தீவுப்பகுதி மக்கள் பஞ்சத்தில் வாடியபோது தனது தாயின் தங்கச் சங்கிலியை விற்று அதனைப் பணமாக்கி அதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு வாங்கி கஞ்சியூற்றிய செயற்பாடு இளம் வயதிலேயே இவரது சமூகம் பற்றிய இறுக்கமான பிணைப்புக்கு உதாரணமாகின்றது.
சர்வோதயம் நிதிவளம்மிக்கதொரு அமைப்பாக என்றமே இருந்ததில்லை. ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைக்கும்போது அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி எனது மனதில் சஞ்சலம் தோன்றும். அப்போதெல்லாம் திருநா அண்ணர் கூறும் நம்பிக்கை வாசகம் இன்றளவும் ஏனோ என்னால் மறக்கமுடியாதுள்ளது. “உங்கள் பணி சுயநலநோக்கற்றதாக, சமூகத்துக்குத் தேவையானதாக நீங்கள் பூரணமாக நம்பினால் துணிந்து வேலையைத் தொடங்குங்கள்.
கடவுள் காசை எப்படியும் அனுப்பிவைப்பார்.” இத்தகைய துணிச்சலையும் நம்பிக்கையையும் எனக்கு திருநா அண்ணருக்குப் பின்னர் இன்றுவரை வேறு எவருமே தந்ததில்லை. புதிய நூல்தேட்டம் தொகுதியொன்றைப் பதிவுக்காகத் தொடங்கும் ஒவ்வொரு தடவையும் பணத்துக்காக நான் தடுமாறும் போதெல்லாம் திருநா அண்ணரின் அந்த நம்பிக்கையூட்டும் வாசகங்களே என் மனதில் தவறாமல் வந்துசெல்கின்றன. நூல்தேட்டத்தின் ஆறாவது தொகுதியின் தொகுப்புப் பணியில் நிற்கும் என்னை எறத்தாழ பதினைந்து தொகுதிகள் வரையாவது இந்த வாசகமே இழுத்துச்செல்லும் என்று நம்புகின்றேன்.
பாடசாலைக் கல்வியை முறையாகக்கற்று முடித்திராத அவரது வாழ்வை நெறிப்படுத்தியது யாழ்ப்பாண பொது நூலகமே என்று அடிக்கடி எனக்குக் கூறிவந்த அவரின் மனதில் நூல
----------------------------------------------------------------
சென்னை 3 பந்துகள் மட்டுமே மீதி இருந்த வேளை 4 விக்கெட்டுகளினால் மும்பையை வென்றது
மாளிங்கவினதும் குமாரினதும் அற்புதமான பந்து வீச்சை எதிர்த்தாடி வென்றது சென்னை .ஸ்மித் சிறப்பான 57 ஓட்டங்கள்.தோனியால் மட்டுமே கடைசி ஓவரில் அதி சிறப்பான வெற்றிக்கான ஆட்டத்தினை கொடுக்க முடியும் என்பதனை நிரூபித்துள்ளார் கடைசி ஓவரில் 19.1,19.2.19.3 இல் 3 (1 வைட் ),4,6 என அடித்து விளாசினார்
Mumbai T20 157/6 (20/20 ov)
Chennai T20 160/6 (19.3/20 ov)
Chennai T20 won by 4 wickets
Indian T20 League - 33rd match
Played at Wankhede Stadium, Mumbai
10 May 2014 - night match (20-over match)
MUMBAI T20 innings (20 overs maximum) | R | B | 4s | 6s | SR | ||
---|---|---|---|---|---|---|---|
LMP Simmons | c du Plessis b Ashwin | 38 | 38 | 3 | 2 | 100.00 | |
CM Gautam† | c McCullum b Badree | 9 | 8 | 2 | 0 | 112.50 | |
AT Rayudu | c Jadeja b Sharma | 59 | 43 | 2 | 4 | 137.20 | |
RG Sharma* | c Raina b Ashwin | 19 | 19 | 1 | 0 | 100.00 | |
KA Pollard | c Raina b Ashwin | 0 | 1 | 0 | 0 | 0.00 | |
CJ Anderson | not out | 18 | 6 | 0 | 2 | 300.00 | |
AP Tare | c du Plessis b Pandey | 9 | 5 | 2 | 0 | 180.00 | |
Extras | (w 5) | 5 | |||||
Total | (6 wickets; 20 overs) | 157 | (7.85 runs per over) |
Bowling | O | M | R | W | Econ | ||
---|---|---|---|---|---|---|---|
S Badree | 4 | 0 | 34 | 1 | 8.50 | (1w) | |
IC Pandey | 4 | 0 | 34 | 1 | 8.50 | (2w) | |
RA Jadeja | 4 | 0 | 33 | 0 | 8.25 | ||
MM Sharma | 4 | 0 | 26 | 1 | 6.50 | ||
R Ashwin | 4 | 0 | 30 | 3 | 7.50 | (1w) |
CHENNAI T20 innings (target: 158 runs from 20 overs) | R | B | 4s | 6s | SR | ||
---|---|---|---|---|---|---|---|
DR Smith | c Simmons b Kumar | 57 | 51 | 5 | 3 | 111.76 | |
BB McCullum | lbw b Kumar | 13 | 11 | 1 | 1 | 118.18 | |
SK Raina | st †Gautam b Pollard | 19 | 11 | 3 | 0 | 172.72 | |
F du Plessis | b Malinga | 31 | 24 | 2 | 1 | 129.16 | |
MS Dhoni*† | not out | 22 | 12 | 1 | 1 | 183.33 | |
RA Jadeja | b Malinga | 6 | 7 | 1 | 0 | 85.71 | |
M Manhas | run out (Kumar/†Gautam) | 1 | 1 | 0 | 0 | 100.00 | |
R Ashwin | not out | 0 | 0 | 0 | 0 | - | |
Extras | (b 1, lb 5, w 5) | 11 | |||||
Total | (6 wickets; 19.3 overs) | 160 | (8.20 runs per over) |
Bowling | O | M | R | W | Econ | ||
---|---|---|---|---|---|---|---|
P Kumar | 4 | 0 | 31 | 2 | 7.75 | ||
SL Malinga | 4 | 0 | 15 | 2 | 3.75 | (1w) | |
JJ Bumrah | 4 | 0 | 33 | 0 | 8.25 | (1w) | |
Harbhajan Singh | 4 | 0 | 22 | 0 | 5.50 | ||
KA Pollard | 2.3 | 0 | 42 | 1 | 16.80 | (3w) | |
CJ Anderson | 1 | 0 | 11 | 0 | 11.00 |