பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக