மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதற்கு காரணம் கூறும் விலங்கியல் துறைத் தலைவர்
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி ஒதுங்கிய சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார்.
நேற்று காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் சூரை, கீரி, கூடை, பாலைக்குட்டி உட்பட குறித்த சில மீன் இனங்கள் எதிர்பாராத வகையில் கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக ஒதுங்கிய நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு காரணம் என்ன என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவாவிடம் கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடலில் குளிரான பகுதியில் நடமாடும் குறித்த மீன் இனங்கள் காலநிலை மாற்றம் காரணமாகவே கரையை நோக்கி நகர்ந்திருக்கலாம். அதாவது கரையோரத்தை நோக்கிய பகுதிகளில் வெப்பநிலை குறைந்த நீரோட்டங்கள் வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் இது காலநிலை மாற்றத்தினூடாக நிகழும் சில மாற்றங்கள் ஆகும்.

இந்த மாற்றங்களை அறிந்து கொள்ள அவுஸ்திரேலியவிலுள்ள பேத் பல்கலைக்கழகத்திலுள்ளது போன்று பாடநெறிகள் எமது நாட்டில் இல்லை. சமுத்திரவியல் பாடநெறிகள் எமது நாட்டில் இல்லாத நிலையில் சமுத்திரத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
சமுத்திரவியல் பாடநெறிகள் இருக்குமானால் சமுத்திரத்தில் இப்படியான மாற்றங்கள் நிகழும்போது அடுத்தது என்ன நடக்கும் அதாவது மழை பெய்யுமா? வெள்ள அனர்த்தம் ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே அறியக்கூடியதாக இருக்கும்.

மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வருவது என்பது புதிய விடயம் அல்ல. சில காலப்பகுதியில் குறிப்பாக மழை வீழ்ச்சி கூடிய பருவப் பெயர்ச்சி காலங்களில் கிழக்கு கரையோரத்தில் பல பகுதிகளில் நடைபெறுவது வழமை ஆனால் இம்முறை சில சமயம் கூடுதலாக வந்திருக்கலாம்.

இந்த மீன்கள் உண்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. சில சமயம் பாதிப்பு இருக்கும் என்று கருதினால் உயிரியல் இரசாயனவியல் பரிசோதனை மூலம் தான் பரிசோதிக்க முடியும். ஆனால் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை பொறுத்தவரை இந்த மீன்களை உண்பதால் பாதிப்பு ஏற்படும் என கருத முடியாது. காரணம் காலநிலை மாற்றம் காரணமாக மீன்கள் தாங்கள் வாழும் சூழலை நோக்கி நகர்ந்துள்ளதே தவிர வேறு காரணங்கள் இல்லை என்றார்.
நேற்று காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் சூரை, கீரி, கூடை, பாலைக்குட்டி உட்பட குறித்த சில மீன் இனங்கள் எதிர்பாராத வகையில் கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக ஒதுங்கிய நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு காரணம் என்ன என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவாவிடம் கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடலில் குளிரான பகுதியில் நடமாடும் குறித்த மீன் இனங்கள் காலநிலை மாற்றம் காரணமாகவே கரையை நோக்கி நகர்ந்திருக்கலாம். அதாவது கரையோரத்தை நோக்கிய பகுதிகளில் வெப்பநிலை குறைந்த நீரோட்டங்கள் வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் இது காலநிலை மாற்றத்தினூடாக நிகழும் சில மாற்றங்கள் ஆகும்.
இந்த மாற்றங்களை அறிந்து கொள்ள அவுஸ்திரேலியவிலுள்ள பேத் பல்கலைக்கழகத்திலுள்ளது போன்று பாடநெறிகள் எமது நாட்டில் இல்லை. சமுத்திரவியல் பாடநெறிகள் எமது நாட்டில் இல்லாத நிலையில் சமுத்திரத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
சமுத்திரவியல் பாடநெறிகள் இருக்குமானால் சமுத்திரத்தில் இப்படியான மாற்றங்கள் நிகழும்போது அடுத்தது என்ன நடக்கும் அதாவது மழை பெய்யுமா? வெள்ள அனர்த்தம் ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே அறியக்கூடியதாக இருக்கும்.
மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வருவது என்பது புதிய விடயம் அல்ல. சில காலப்பகுதியில் குறிப்பாக மழை வீழ்ச்சி கூடிய பருவப் பெயர்ச்சி காலங்களில் கிழக்கு கரையோரத்தில் பல பகுதிகளில் நடைபெறுவது வழமை ஆனால் இம்முறை சில சமயம் கூடுதலாக வந்திருக்கலாம்.
இந்த மீன்கள் உண்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. சில சமயம் பாதிப்பு இருக்கும் என்று கருதினால் உயிரியல் இரசாயனவியல் பரிசோதனை மூலம் தான் பரிசோதிக்க முடியும். ஆனால் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை பொறுத்தவரை இந்த மீன்களை உண்பதால் பாதிப்பு ஏற்படும் என கருத முடியாது. காரணம் காலநிலை மாற்றம் காரணமாக மீன்கள் தாங்கள் வாழும் சூழலை நோக்கி நகர்ந்துள்ளதே தவிர வேறு காரணங்கள் இல்லை என்றார்.