காலத்தின் தேவை கருதி பிரான்ங்போர்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு
இவ் எழுச்சி நிகழ்வில் குறிப்பாக இளையோர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கவனயீர்ப்பு போராட்டம் இந்திய தூதரகத்தை சென்றடைந்ததும் தமி
ழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிர் தந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.அகவணக்கத்தை தொடர்ந்து மக்களால் தமிழீழ தேசியக் கொடியை அசைத்தவாறு தொடர்ச்சியாக கொட்டொலிகள் எழுப்பப்பட்டது.
தமிழ் இளையோர் அமைப்பினரால் இந்திய தூதரத்திற்கு மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இப்போராட்டமானது வேற்றின மக்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்றது, வாகனத்தில் சென்ற வேற்றின மக்கள் தமது வாகனத்தின் சாலரத்தை திறந்து தமிழர்களின் கோரிக்கையை அறிந்து கொண்டார்கள்.
இறுதியில் தமிழர்களின் தாரக மந்திரத்தை கூறி எழுச்சிபூர்வமாக போராட்டம் நிறைவடைந்தது. 



