இந்த விஞ்ஞான யுகத்திலும் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, தனது வன்மத்தைக் கக்கியிருக்கிறது சாதியவெறி.
நக்கீரன்
எங்கே?
பெண்சிசுக் கொலைகளுக்கும் சாதியத்துக்கும் பெயர்போன உசிலம்பட்டிப் பகுதியில் இருக்கும் இருக்கும் வடுகப்பட்டியில்.
""விவகாரம் போலீஸ்வரை போயிருப்பதால், அவன் குடும்பமே அவங்க தரப்புக்குப் பயந்து மதுரைப் பக்கம் தலைமறைவா இருக்கு'' என்றார்கள்.
நீண்ட தேடலுக்குப் பின் அருண்குமா ரின் அம்மா நாகம்மாளை சந்தித்தோம். நடந்ததை மிகுந்த சங்கடத்தோடு நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்... ""அவங்கத் தெரு வழியாத்தான் ஸ்கூலுக்குப் போயாகணும். போன எட்டாந் தேதி, ஸ்கூலில் ரிசல்ட் பார்க்கப் போற பதட்டத்தில், செருப்பைக் கழட்டாம அவங்கத் தெருவழியாப் போயிருக்கான். இதைப்பார்த்த நிலமாலைங் கிறவர், "ஏண்டா நாயே, தலித்துகள் இந்தத் தெருவழியா செருப்பு போட்டுக்கிட்டு போகக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? கீழ்சாதியில் பொறந்த உனக்கெல்லாம் செருப்பு ஒரு கேடா?'ன்னு சொன்னதோட, எங்க சாதியச் சொல்லி கேவலமாத் திட்டிட்டு, "உன் செருப்பைத் உன் தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஸ்கூல்வரைக்கும் போடா. இதுதான் உனக்குத் தண்ட னை'ன்னு சொல்லி மிரட்டியிருக்கார். எங்க பையனும் அவருக்கு பயந்து, தன் செருப்பைத் தூக்கி தலையில் வச்சிக்கிட்டு அவமானத்தோட ஸ்கூலுக்குப் போயிருக் கான். அதைப் பார்த்த அங்க இருந்த மாணவர்கள் கேலி பண்ணிச் சிரிச் சிருக்காங்க. இதில் எங்க பையன் அவமான மாகி, மனம் குன்றிப்போயிட்டான். இதை எங்க ஆளுங்கக்கிட்ட சொல்லி முறை யிட்டேன். அவங்க, கேள்வி கேட்க பயந் தாங்க. அதுக்கு அப்புறம்தான் சமூக சேவகியும் வக்கீலுமான தெய்வத்தம்மா மூலம் வடுகப்பட்டி போலீஸுக்குப் போனோம். தலித்தா பொறந்தது எங்க தப்பா? காலா காலமா நாங்க அவமானத்தை சுமந்துக்கிட்டுத்தான் வாழ்ந்தாகணுமா?'' என்றார் கண்ணீர் சுரக்கும் விழிகளோடு.
அருகில் இருந்த அருண்குமாரிடம் என்ன நடந்தது? என்றபோது, அவ னிடமிருந்து அழுகை தான் பதிலாக வந்தது.
உசிலம்பட்டி டி.எஸ்.பி. சரவணக்குமாரோ, ""எங்க விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மைன்னு தெரியவந்தது. நடவடிக்கை எடுத்திருக்கோம். மாணவன் அருண்குமார் குடும்பம் தைரியமா ஊருக்குள் வரலாம். அவங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும்''’என்றார் உறுதியான குரலில்.
இந்த நிலையில் ஆதி திராவிடர் தேசிய ஆணை யத்தினர் வெங்கடேசன் தலைமையில் வடுகப்பட்டிக்கு 11-ந் தேதி வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் நம்மிடம் பேசிய வெங்கடேசன், ""விசாரித்தபோது ரொம்பவும் வேதனையாக இருந்தது. சம்பவத்தை முழுதாக விசாரித்து அறிந்தோம். இந்த விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது''’என்றார் கறார் குரலில்.
இனியாவது உசிலம்பட்டிப் பகுதியில் தலை விரித்தாடும் சாதியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.