ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
தேர்வு செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் மார்கரெட் ஆல்வாவை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா வருகிற 13–ந்தேதி பதவி ஏற்கிறார். சிந்தியா ராஜஸ்தானில் ஏற்கனவே 2003-2008 வரையில் முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதனை அடுத்து முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா வருகிற 13–ந்தேதி பதவி ஏற்கிறார். சிந்தியா ராஜஸ்தானில் ஏற்கனவே 2003-2008 வரையில் முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.