மின்னேரியா காட்டில் துப்பாக்கிகள் சகிதம் 4 பேர் கைதாகியுள்ளார்கள்
கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள், கத்திகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களா இல்லை சிங்களவர்களா என்பது தொடர்பான விடையங்களை எதனையும் பொலிசார் தெரிவிக்கவில்லை. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்