நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் அஜீத் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அஜீத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களை பிடித்து விசாரிக்கப்பட்டனர். 108 நம்பருக்கு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டான் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டுபிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்தவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது.
அஜீத் பி.ஆர்.ஓ.விடம் விசாரித்தபோது, வெடிகுண்டு இருப்பதாக ஒரு புரளி கிளம்பியது. போலீசார் வந்து சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை என்றும், புரளியான செய்தி என்றும் கூறிவிட்டு சென்றனர் என்றார்.