யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நேற்று இரவு குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.