இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில்
முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி அணியினர் முதலாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 58 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்று 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது .
குறித்த போட்டித் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரப்பமானது.முதலாவது இனிங்சின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்கந்தவரோதய கல்லூரி அணி 63 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஸ்கந்தவரோதய கல்லூரி அணிசார்பாக துடுப்பாட்டத்தில் சயந்தன் 56 ஓட்டங்களையும் ,அஜிந்தன் 52 ஓட்டங்களையும்,கோதவக்சன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.உதிரிகளாக 17 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றது.
மகாஜனா கல்லூரி அணி சார்பாக பந்து வீச்சில் டினேஷ் 15 ஓவர்கள் பந்து வீசி 56 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும்,யனுசன்,கனிஸ்டன்,சுஜீவன்,சாருஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி அணி, 66 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.மகாஜனா கல்லூரி அணிசார்பாக துடுப்பாட்டத்தில் யனுசன் 56 ஓட்டங்களையும் ,முரளிதரன் 39 ஓட்டங்களையும்,டினேஸ் 30 ஓட்டங்களையும்,யசிந்தன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.உதிரிகளாக 25 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றது.
ஸ்கந்தவரோதய கல்லூரி அணிசார்பாக பந்து வீச்சில் சோபிகன் 18 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் ,கஜீபன்,டான்சன்,கோதவக்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இனிங்சில் பதிலுக்கு துப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி இரு அணிகளும் வெற்றி தோல்வி இன்றி சமனான நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஸ்கந்தவரோதய கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சயந்தன் 32 ஓட்டங்களையும்,சாருஜன் 21 ஓட்டங்களையும்,சஜீவன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.மகாஜனா கல்லூரி அணிசார்பாக பந்து வீச்சில் யனுசன் 10 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும்,டினேஸ் 5 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
குறித்த போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதய கல்லூரி அணியின் சயந்தன்,சிறந்த பந்து வீச்சாளராக ஸ்கந்தவரோதய கல்லூரி அணியின் சோபிகன்,சிறந்த களத்தடுப்பாளராக மகாஜனா கல்லூரி அணியின் யசிந்தன்,சகல துறை வீரராக மகாஜனா கல்லூரி அணியின் டினேஸ்,போட்டித்தொடரின் சிறந்த வீரராக மகாஜனா கல்லூரி அணியின் யனுசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பதக்கங்கள்,வெற்றிக் கிண்ணங்கள்,பரிசில்களை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் வழங்கி கௌரவித்தார். மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.