பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் டு நொர்ட் தொடருந்து நிலையம் உள்ளது.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தொடருநு்து நிலையத்தில் இருந்து அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினா விசாரணை நடத்தி வருகின்றனர்.