
பாலஸ்தீனத்திற்கு உதவ சென்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படை அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார்.
கதிரோவைட்ஸ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும். ரஷ்யாவின் வார்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக திரும்பியபோது அதை எதிர்த்து சண்டையிட்டது இந்த துணை ராணுவ படைதான்.
இந்த படையின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் கூறுகையில்,
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதேபோல மேற்கு நாடுகள், போராளிகளை அளிப்பதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். இந்த போரில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம். இது மற்ற மோதல்களைப் போலல்லாமல் மேலும் மேலும் அதிகரிக்கலாம். மத்திய கிழக்கில் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் பிரிவுகளை நிலைநிறுத்த தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஈரான் இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் அதை மறுத்திருக்கிறது. மட்டுமல்லாது ஏதாவது ஒரு குண்டு கூட ஈரான் பக்கம் திரும்பினால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்தது.
இதற்கிடையில் அமெரிக்காவின் போர் கப்பல் USS Gerald R Ford தற்போது காசாவுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த போரில் அமெரிக்க படை, இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்யும். அதன் பின்னர் ஈரான்தான் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் கோலோச்சும் நிலை ஏற்படும்.
நிலைமை இப்படி இருக்கையில், தற்போது ரஷ்யாவின் துணை இராணுவ படைகளில் ஒன்றான செச்சென் பிரிவு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அவசியமெனில் பாலஸ்தீனத்தில் சண்டை செய்வோம் என அறிவித்துள்ளதுள்ளமை இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.