![]() வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் நேற்று அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர் |