![]() கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் |