-
24 ஜன., 2023
நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா - தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.
யாழ்ப்பாணத்தில் வீணை , மட்டக்களப்பில் படகு சின்னத்தில் போட்டி!
![]() உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் |
சுன்னாகத்தில் பட்டப் பகலில் வாகனத்தால் மோதி விட்டு வாள்வெட்டு! நால்வர் படுகாயம்
![]() யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாம் பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது |
தற்கொலைக் குண்டுதாரிக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு மரணதண்டனை!
![]() டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சம்பந்தன், சுமந்திரனை நீக்கி விட்டோம்! [Monday 2023-01-23 18:00] |
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். |
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட்டுகின்றது. வீட்டுச் சின்னம் தான் தமிழர்களுடைய சின்னம் என்றும் தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய கட்சி என்றும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சி இல்லாத 5 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றது. முதல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்த எம்.ஏ. சுமந்திரனும் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இ.கதீர் தெரிவித்திருந்தார். |
சம்பந்தர் தான் கூட்டமைப்பின் தலைவர்
![]() ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் |
தர்மலிங்கத்தை படுகொலை செய்தவர்களுடன் மகன் கூட்டு
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் |
சம்பந்தன், சுமந்திரனை விமர்சித்து வாக்குகளை கேட்கமாட்டோம்!
![]() மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்?
23 ஜன., 2023
யாழ். மாநகர முதல்வர் நியமனம் என் அதிகாரத்துக்குட்பட்ட விடயம் அல்ல!
![]() யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் |
சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளர் இல்லை! - 'கட்டை' போடுகிறது ரெலோ
![]() ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். |
சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் இல்லை! - ரெலோ பேச்சாளர் அதிரடி அறிவிப்பு.
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகி விட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் |
திருகோணமலை உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களில் சறுக்கிய தமிழ்க் கட்சிகள்!
![]() 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார் |
காலத்தைக் கடத்தாமல் தீர்வுகளை நோக்கி பேசுங்கள்
![]() தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர் |
22 ஜன., 2023
இலங்கை கால்பந்து சம்மேளனத்தை தடை செய்த FIFA
செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!
![]() வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார் |
முல்லைத்தீவில் தமிழரசின் வேட்புமனு நிராகரிப்பு!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன |
யாழ். மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் |
மஹிந்த, கோட்டாவுக்கு எதிரான தடை - ஜி7 நாடுகளையும் இணைக்க கனடா முயற்சி!
![]() முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார். |
செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!
வேட்பு மனு நிராகரிப்பு! [Sunday 2023-01-22 07:00] |
![]() வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார் |