ராஜீவ் காந்தி கொலையில் சந்தேக நபராக் சுப்ரமணிய சுவாமி !
இதில் விநோதமான விடையம் என்னவென்றால், தமிழ் நாட்டில் அப்போது இருந்த திருச்சி வேலுசாமிக்கு கூட தெரியாது ராஜீவ் கொல்லப்பட்டது. ஆனால் 20 நிமிடங்களில் டெல்லியில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு எப்படி இத்தகவல் தெரியும் ? என்று திருச்சி வேலுசாமி அவர்கள் தனது நூலில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுமட்டும் அல்ல பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் தனது புத்தகத்தில் பதிவுசெய்ய தவறவில்லை. மிகவும் சுவாரசியமான இப் புத்தக வெளியீடு , நேற்றைய தினம்(ஞாயிற்றுக் கிழமை) மாலை குரொய்டனில் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளட்கள் பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.