இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தீவக கிளை தலைவர் கருணாகரன் குணாளன் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் , நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும் பதினெட்டாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகை , Tamil Cnn இணையத்தளத்தின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி தீவக கிளை தலைவர் கருணாகரன் குணாளன், பொருளாளர் ரமேஷ் றமில்டன் , உறுப்பினர் குஷன் மோகனரூபன் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை மூலக்கிளையின் தலைவர் கனகையா , செயலாளர் மடுத்தீன் பெனடிக்ற் , பொருளாளர் வரதராசன் , புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையின் உப செயலாளர் லாவண்யா மகேஸ்வரன் மற்றும் சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் , விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர் .










