
கடந்த ஒம்பது மாதங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடைபெற்றுக் கொன்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் கைப்பற்றிய கெர்சான் பகுதியினை விட்டு ரஷிய படையினர் உடனடியாக வெளியேறினர். இதன் பின்
அந்தப் பகுதியின் நிலமை பற்றி ஆய்வு செய்ய உக்ரைன் அதிகாரிகள் சென்றிருந்தனர்.இதன்போது, அவர்கள் ஆய்வு நடவடிக்கையினை மேற்கொன்டு இருக்கும்போது ஒரே இடத்தில் கடுமையான சித்திரவதைக் காயங்களுடன் 63 சடலங்களை மீட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் எலக்ரிக் சாக் பிடிக்கப்பட்டும், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் குச்சியினால் தாக்கப்பட்டும் மற்றும் செயற்கையான மூச்சுத் தினறல் மூலமாகவும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிடியிலிருந்த இந்தப் பகுதியில் அதிகளவிலான போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் இவ் குற்றங்களை ரஷியா மறுத்துள்ளது.