புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2025

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா நிபந்தனை! [Thursday 2025-03-13 19:00]

www.pungudutivuswiss.com

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஷ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஷ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது.

உக்ரைன் போருக்கு அடிப்படை காரணங்களான நேட்டோவின் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பு குறித்தும் சமீபகாலமாக ரஷ்யா சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்நிலையில் புதிதாக என்ன விடயங்களை சேர்த்துக்கொண்டுள்ளது

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாரா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

கடந்த மூன்று வாரங்களாக ரஷ்ய அமெரிக்க அதிகாரிகள் இந்த நிபந்தனைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி இணங்கியுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காத்திருக்கின்றார்.

அதேவேளை முன்னாள் கேஜிபி உறுப்பினரான விளாடிமிர் புட்டின் யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா உக்ரைன் ஐரோப்பாவிற்கு இடையில் கருத்துவேறுபாடுகளை உருவாக்க முயல்வார் என அமெரிக்க அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபுணர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்

ad

ad