ஆகஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்நன்றி .நக்கீரன்
இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டுமென தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு கூட, அவரது பிறந்த நாளின் போது வாழ்த்து தெரிவிக்காத ராகுல்காந்தி, விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் பரபரப்பை அதிகரிக்கவே செய்திருக்கிறது.
""செப்டம்பர் 14, 2005-ல் கட்சியை துவக்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளையும் ஒரு எம்.எல்.ஏ.வையும் (அவரது வெற்றி) பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் களில் அதே 8 சதவீத வாக்குகளைப்பெற்ற தே.மு.தி.க., 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீதம் பெற்றது. தனித்துப் போட்டியிட்டே வந்த விஜயகாந்த், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் போட்டியிட்டு 7.9 சதவீதம் வாக்குகளையும் 29 எம்.எல்.ஏ.க்களையும் பெற்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார்'' என்பது அரசியல் விமர்சகர்களின் புள்ளி விபரக் கணக்கு.
ஒருமுறை சட்டமன்றத்தில், ""கூட்டணி வைக்க தகுதியில்லாதவர். அவருடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்'' என்று கடுமையாக விஜயகாந்தை சாடினார் ஜெயலலிதா. அதற்கு வெளியில் பேட்டியளித்த விஜயகாந்த், ""அவங்க (ஜெ) கூட கூட்டணி வைத்ததற்காக நாங்க வெட்கப்படுகிறோம். கூட்டணிக்காக எப்படியெல்லாம் கெஞ்சினாங்கங் கிறதை மறந்துட்டுப் பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. நான் பேசணும்னு நெனைச்சா நிறைய பேச வேண்டியதிருக்கும். அ.தி.மு.க.வின் வெற்றியில் தே.மு.தி.க. வின் பங்கு அதிகமிருக்கிறது. இந்த உண்மையை அறிந்துகொள்ள 2016 சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலே அதனை நிரூபிக்கும்'' என்று கடுமையாக பதிலடி தந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸும், பா.ஜ.க.வும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இதுகுறித்து பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தலைமைகளுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது,’’""தமிழகத்தில்
அதற்கு மணியன், "விஜயகாந்த் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்னு எனக்குத் தெரியவில்லை. முயற்சித்துப் பார்க்கிறேன்' என்றவர், விஜயகாந்தை சந்திப்பதற்காக தே.மு.தி.க.வின் தலைமைநிலையச் செயலாளர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு பேசினார். அவரோ, "கேப்டனுக்கு 25-ந்தேதி பிறந்த நாள். அன்றைக்கு வருகிறீர்களா' என்று பார்த்தசாரதி சொல்ல, "பிறந்த நாளில் யாரையும் தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. இன்றைக்கு பார்க்க முடியுமா?' என்று மணியன் சொல்லவும், "சந்திக்கலாம். வரச்சொல்லுங்கள்' என்றார் விஜயகாந்த்.
இந்த சூழலில்தான், விஜயகாந்திற்கு ஃபேக்ஸ் மூலம் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவிக்க, காங்கிரஸின் மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், ஞானதேசிகன் உள்பட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது,’’""நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை கூட்டணியில் தி.மு.க.சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தே.மு.தி.க.வுடன் கூட்டணியை உறுதிசெய்துகொண்டு காங்கிரஸை கழட்டி விடவும் செய்யலாம். இரண்டுக்குமே வாய்ப்பிருக்கு. கழட்டிவிடப்படும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும். அதனால், தே.மு.தி.க.வுடன் நாம் கூட்டணிக்கான விதையை இப்போதே ஊன்றி வைக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் ஏற்பட்ட காயத்தினால் நம் மீது விஜயகாந்திற்கு வருத்தம் இருக்கும். அதையெல் லாம் துடைக்கிற மாதிரி விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்த்துச் சொல்லுங்கள் என்று ராகுல்காந்தியிடம் வாசனும், திருநாவுக்கரசும் தெரிவித்திருக்கிறார்கள்.
தே.மு.தி.க. தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது,’’""தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தே.மு.தி.க. உள்ளது என்பது மத்திய உளவுத்துறை தந்துள்ள தகவல். தமிழக அரசியலை உற்று கவனித்து வரும் ராகுல்காந்தி இந்த தகவலின் அடிப்படையிலேயே எங்கள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால் ராகுலின் திட்டத்திற்கோ பா.ஜ.க.வின் முயற்சிக்கோ எங்கள் தலைவர் அவ்வளவு எளிதாக இடம் கொடுத்துவிட மாட்டார். காங்கிரஸ் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு போனால் நம்முடைய வலிமையும் சேர்ந்து அந்த கூட்டணிக்கு நல்ல வெற்றியைத் தரும். அந்த வெற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அப்படியிருக்கும் சூழலில், தி.மு.க.வுக்கு நாம் ஏன் உரம் தர வேண்டும்? என்பது கேப்டனின் கருத்தாக இருக்கிறது தற்போது'' என்கிறார்கள் அழுத்தம் தந்து.