7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது. அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜேட்லி கூறியதாவது,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அந்த முடிவுகள் ஏமாற்றம் தருகிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு வேதனையைத் தருகிறது. அந்த முடிவை மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.